search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கின்னஸ் சாதனை"

    • 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் (வயது 62). கடந்த 1961-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி அன்று பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக ஒட்டிபிறந்தனர்.

    பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது உயிரிழந்தனர்.

    இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள். மேலும் கடந்த 2007-ம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்களானார்கள். இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் நிறுவனம் உள்பட உலக அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

    • 12 தசாப்தங்களுக்கு மேலான வாழ்க்கையின் மைல்கல்லை கடந்துள்ள மார்சிலோனா அபாத் கடந்த 5-ந்தேதி 124-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • பழங்கள் மற்றும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் தான் எனக்கு சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் இருப்பதாக அபாத் கூறினார்.

    பெரு நாட்டை சேர்ந்த 124 வயதான மார்சிலோனா அபாத் என்ற முதியவர் உலகின் வயதான நபர் என்று நம்பப்படுகிறார். இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி ஹுவான்கோ பகுதியில் பிறந்ததாக கூறப்படுகிறது.

    அந்த பகுதியின் பசுமை மற்றும் வன விலங்குகளுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்ந்ததால் அபாத்தின் உடல்நலம் தேறியதாக அந்த நாட்டின் அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    12 தசாப்தங்களுக்கு மேலான வாழ்க்கையின் மைல்கல்லை கடந்துள்ள மார்சிலோனா அபாத் கடந்த 5-ந்தேதி 124-வது பிறந்தநாளை கொண்டாடினார். இது கின்னஸ் உலக சாதனையில் அபாத்தின் பெயரை உலகின் வயதான நபராக பதிவு செய்ய உதவியதாக பெரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பழங்கள் மற்றும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் தான் எனக்கு சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் இருப்பதாக அபாத் கூறினார்.

    • பிறந்த தேதி, மரபியல், குடும்ப வரலாறு போன்றவை நீண்ட ஆயுளில் பங்கு வகித்தாலும் தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது எனவும், மதுவை அரிதாகவே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை வெனிசுலாவை சேர்ந்த 114 வயதான ஜூவான் விசென்டே பெரேஸ் மோரா பெற்றிருந்தார். அவர் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 111 வயது முதியவரான ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் இப்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார். அவர் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார்.

    அதில் நீண்ட ஆயுளுக்காக உணவு ரகசியங்கள் என்று எந்த சிறப்பு அம்சமும் இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எதைப்பற்றியும் அதிகமாக சிந்தித்தால் அதிகம் எதையும் செய்ய முடியாது. பிறந்த தேதி, மரபியல், குடும்ப வரலாறு போன்றவை நீண்ட ஆயுளில் பங்கு வகித்தாலும் தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    எனக்கு என்று தனியாக எந்த சிறப்பு உணவு முறையும் இல்லை. ஆனாலும் சமச்சீர் உணவு, பழங்கள், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவோடு உண்பது போன்றவை நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமையும் என்றார். மேலும் தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது எனவும், மதுவை அரிதாகவே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
    • கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.

    சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரெயில் 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

    அதன் பிறகு பல முறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளுக்கு பிறகு ஒரு முழு ஹைட்ரஜன் டேங்க் மூலம் 1,741 மைல்கள் (2,803 கிலோ மீட்டர்) பயணம் செய்துள்ளது. கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.

    இதுகுறித்து ஸ்டாட்லர் நிறுவன துணைத் தலைவர் டாக்டர். அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில், இந்த உலக சாதனையானது எங்கள் ஹைட்ரஜன் ரெயிலின் சிறந்த செயல் திறனை காட்டுகிறது. இது மகத்தான சாதனை ஆகும். மற்றொரு உலக சாதனை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    • நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

    துபாய்:

    ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.


    இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.

    விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    • பேப்பர் தோசை முதல் பன்னீர் தோசை வரை என மக்கள் சமைப்பதில் 100-க்கும் மேற்பட்ட வகைகளை நாம் இன்றைய காலத்தில் பார்க்க முடியும்.
    • கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 123 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தோசை தயாரிக்க முடிவு செய்தது.

    பெங்களூரு:

    ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு செய்முறை என்று வரும்போது, தோசை ஒருபோதும் ஈர்க்க தவறுவதில்லை. தென்னிந்திய சமையலில் பிரபலமாக அறியப்படும் தோசை புளித்த அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட மாவுடன் தயாரிக்கப்பட்டது. குறைந்த எண்ணெய் நெய்யுடன் ஒரு ஒட்டாத பாத்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. பேப்பர் தோசை முதல் பன்னீர் தோசை வரை என மக்கள் சமைப்பதில் 100-க்கும் மேற்பட்ட வகைகளை நாம் இன்றைய காலத்தில் பார்க்க முடியும்.

    இந்த நிலையில் பெங்களூரு பொம்மசந்திராவில் எம்.டி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 123 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தோசை தயாரிக்க முடிவு செய்தது. அதன்படி 75 சமையல் கலைஞர்கள் குழுவுடன் எம்.டி.ஆர். புட்ஸ் நிறுவனம் இணைந்து லார்மன் கிச்சன் எக்யூப்மென்ட் மூலம் தோசை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 110 முறை தோல்விக்கு பிறகு அவர்கள் 123 அடி நீள தோசையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.


    இந்த தோசை 54 அடி 8.69 அங்குலம் இருந்தது. 37.5 மீட்டர் நீளம் கொண்டது. சிவப்பு அரிசி மாவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள எம்.டி.ஆர். தொழிற்சாலையில் இந்த மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டது.

    இந்த தோசை தயாரிப்பில் தலைமை சமையல்காரராக செயல்பட்ட செப் ரெஜி மேத்யூ தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி, "எம்டிஆரில் ஒரு வரலாற்று மைல்கல்லை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 123.03 அடி நீளமான தோசைக்கான கின்னஸ் உலக சாதனை பட்டத்துடன் 100-வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறோம் என தெரிவித்துள்ளார்.

    • சோபியா என்ற அந்த சிறுமி உலக சாதனை படைக்கும் போது அங்கிருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டி இருந்தது.
    • முதலில் சிறிய அளவிலான ஜெர்சியும் பின்னர் அளவில் பெரிய ஜெர்சியும் அணிந்திருந்தார்.

    சமீப காலமாக உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பலரும் பல்வேறு வகைகளில் உலக கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுமி ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    சோபியா என்ற அந்த சிறுமி உலக சாதனை படைக்கும் போது அங்கிருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டி இருந்தது. சோபியாவை போலவே அவரது தாயாரும் உலக சாதனை படைத்துள்ளார். முதலில் சிறிய அளவிலான ஜெர்சியும் பின்னர் அளவில் பெரிய ஜெர்சியும் அணிந்திருந்தார்.

    சோபியா உலக சாதனையை தான் வசிக்கும் இடத்தில் உள்ள பொது நூலகத்தில் படைத்தார். முன்னதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் தோமஸ் உமாம்போ ஒரே நேரத்தில் 40 ஜெர்சிகளை அணிந்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை சோபியா முறியடித்துள்ளார்.

    • 39 வயதான புஸ்கோவ் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
    • கின்னஸ் சாதனை அமைப்பின் தகவல்படி புஸ்கோவ், பல சவால்களுக்கு மத்தியில் இந்த தீப்பெட்டி சவாலை தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

    இப்படி எல்லாம் கூட சாதனை படைக்க முடியுமா? என வியக்க வைக்கிறார்கள் சிலர். அந்த வகையில் டென்மார்க்கை சேர்ந்த பீட்டர் வான் டாங்கன் புஸ்கோவ் வித்தியாசமான முறையில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

    39 வயதான அவர் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு மிகப்பெரிய நாசி மற்றும் மிகவும் நீளமான தோல் உள்ளது. அது எனக்கு சாதனை படைக்க உதவியது என்று நம்புகிறேன் என கூறி உள்ளார்.

    கின்னஸ் சாதனை அமைப்பின் தகவல்படி புஸ்கோவ், பல சவால்களுக்கு மத்தியில் இந்த தீப்பெட்டி சவாலை தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டுள்ளது. சிறு வயதில் கூட மூக்கில் பொருட்களை செருகும் ஆசை தனக்கு இருந்ததில்லை என கூறும் புஸ்கோவ் தற்போது சாதனைக்காக இந்த சவாலை ஏற்றதாக கூறினார். மேலும் நான் எப்போதும் வாழ்க்கையின் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான அம்சங்களை தேட முயற்சிப்பேன் என்றார்.

    • தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.
    • லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பொங்காலை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் வருவதுண்டு. சிறப்பு வாய்ந்த இந்த பொங்காலை விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கால் திருவிழா இந்த ஆண்டு நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. காலை 8 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.

    லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள்.

    இரவு 7.30 மணிக்கு குத்தியோட்ட சிறுவர்களுக்கு சூரல் குத்து, இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்கு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் (26-ந்தேதி) காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் திரளானோர் பங்கேற்பார்கள் என்பதால், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    • பரிசோதனை முடிந்ததும் கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார்.
    • பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

    போலந்து நாட்டில் உலக சாதனைக்காக 'ஐஸ்' கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா மிக தைரியமாக பங்கேற்றார். அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவர் 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார். அவர் மீது 'ஐஸ்' கட்டிகள் கொட்டப்பட்டது. அதை தொடர்ந்து கவுண்ட்டவுன் தொடங்கியது.

    அப்போது அவர் 'ஐஸ்' பெட்டிக்குள் 3 மணி நேரம் 6 நிமிடம் 45 செகண்ட் நின்று கின்னஸ் சாதனை படைத்தார். அவரை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர். மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் வெளியே வந்தார். இந்த சாதனை குறித்து கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா கூறியதாவது:-

    இதுபோன்ற பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்கு மன வலிமை, உடல் வலிமை அவசியம் தேவை. இதுபோல் மற்ற பெண்களும் தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க முயற்சிக்க வேண்டும் என அவர் கூறினார்.

    • ஆட்டோமோடிவ் டெஸ்டிங் பபென்பர்க் களத்தில் இதற்கான டெஸ்டிங் செய்யப்பட்டது.
    • நெவெராவை ரிவர்சில் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் இயக்கப்பட்டது.

    ரிமக் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் நெவெரா கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. ரிவர்சில் அதிவேகமாக செல்லும் கார் என்ற சாதனையை ரிமக் நெவெரா படைத்திருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஆட்டோமோடிவ் டெஸ்டிங் பபென்பர்க் களத்தில், இதற்கான டெஸ்டிங் செய்யப்பட்டது.

    முன்னதாக இதே களத்தில் 20-க்கும் அதிக அக்செல்லரேஷன் மற்றும் பிரேக்கிங் சாதனைகளை நெவெரா முறியடித்து இருந்தது. சிமுலேஷன் எனப்படும் இயந்திர பரிசோதனையில் மணிக்கு 241 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியும் என்று தெரியவந்தது. இதனை பரிசோதிக்க முடிவு செய்த குழு, நெவெராவை ரிவர்சில் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் இயக்கியது. அதன்படி ரிமக் நெவெரா ரிவர்சில் மணிக்கு 275.74 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

    "சோதனையின் போதே, அது கிட்டத்தட்ட பழகியதை போன்ற அனுபவத்தை கொடுத்தது. எடுத்த எடுப்பில், பின்புறம் பார்க்க வேண்டும், அப்போது காரின் வேகம் அதிகரித்துக்கொண்டே போகும் போது காட்சிகள் நிழலாடுவதை போன்று தெரியும். இந்த நிலையில், உங்களது கழுத்து- காரை வேகமாக வந்து பிரேக்கிங் செய்யும் போது முன்புறம் செல்வதை போன்று தள்ளப்படும்," என்று காரை ரிவர்சில் இயக்கிய டெஸ்ட் ஓட்டுனர் கோரன் ரென்டக் தெரிவித்தார்.

    நெவெராவில் உள்ள புதுமை-மிக்க டிரைவ்-டிரெயின் காரணமாக இந்த சாதனை சாத்தியமானது. வழக்கமாக கார்களில் உள்ள டிரான்ஸ்மிஷன் இந்த காரில் இல்லாததால், நெவெராவை முன்புறம் மணிக்கு 411 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிய அதே மோட்டார்கள் இந்த காரினை ரிவர்ஸ்-இலும் இத்தகைய வேகத்தில் இயக்க வழி செய்தது.

    முன்னதாக கேட்டர்ஹாம் 7 ஃபயர்பிலேடின் டாரென் மேனிங் 2001-ம் ஆண்டு ரிவர்சில் காரினை மணிக்கு 165.08 கிலோமீட்டர்கள் வேகத்தில் இயக்கியது கின்னஸ் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டோரத்தியின் கடைசி டைவ் அவரது 'உற்சாகமான, நன்கு வாழ்ந்த வாழ்க்கையை' பிரதிபலித்துள்ளது.
    • டோரத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்துள்ளார்.

    அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து 13,500 அடி உயரத்திலிருந்து டோரத்தி குதித்து சாதனை படைத்தார். இதனையடுத்து, அவர் உலகின் மிகவும் மூத்த ஸ்கை டைவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

    இந்நிலையில், கின்னஸ் சாதனை படைத்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், மூதாட்டி டோரத்தி உயிரிழந்துள்ளார். டோரத்தி, ப்ரூக்டேல் லேக் வியூ மூத்த வாழ்க்கை சமூகத்தில் அவரது படுக்கையிலே இறந்து கிடந்தார் என்று அவரது நண்பர் ஜோ கானன்ட் கூறினார். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவே இறந்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து, ஸ்கைடைவ் சிகாகோ மற்றும் யுஎஸ் பாராசூட் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், டோரத்தியின் கடைசி டைவ் அவரது 'உற்சாகமான, நன்கு வாழ்ந்த வாழ்க்கையை' பிரதிபலித்துள்ளது. ஸ்கை டைவிங் என்பது நம்மில் பலர் பாதுகாப்பாக நடத்தப்படும் ஒரு செயலாகும். ஆனால், வாழ்நாளின் சிலிர்ப்பைப் பெற இது ஒருபோதும் தாமதமாகாது என்று டோரத்தி நமக்கு நினைவூட்டுகிறார்" என்றார்.

    டோரத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்துள்ளார். இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    ×